LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, June 26, 2019

கடுவலையில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் அதிரடிப்படையால் முற்றுகை!

கடுவலை பகுதியில் வெளிநாட்டவர்களால் இயக்கப்பட்டு வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் விசேட அதிரடிப் படையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

குறித்த தொலைத்தொடர்பு நிலையத்திலிருந்து பெருமளவான தொலைத்தொடர்பு உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடுவலைப் பகுதியில் பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணொருவர் இரகசியமாக நடத்திவந்த தொலைத்தொடர்பு நிலையத்தை இன்று (புதன்கிழமை) மாலை விசேட அதிரடிப்படையினர் முற்றுகையிட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த இடத்திலிருந்து இரண்டாயிரம் சிம் அட்டைகள், கையடக்கத் தொலைபேசிகள், கணினிகள் என்பனவற்றை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர்.

இதன்போது குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் தீவிர விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.





 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7