தரமுயத்தக் கோரி கதிர்காமத்திற்கு யாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக கடந்த வாரம் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்ட ஒருவரான, பாண்டிருப்பு அனைத்து ஆலயங்களின் தலைவர் கி.லிங்கேஸ்வரன் தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை வடக்கு பிரதேச செயலகம் முன்பாக யாத்திரை ஆரம்பிக்கப்பட்டது.
‘மனிதனால் தீர்த்துவைக்க முடியாத விடயத்தை கடவுள் தீர்த்து வைக்க வேண்டும்’ என்ற கருத்தை வலியுறுத்தி இந்த பாதை யாத்திரை முன்னெடுப்படுவதாக யாத்திரிகர்கள் தெரிவித்தனர்.
இதன்போது கிழக்கில் கேள்விக்குறியாகியுள்ள தமிழர்களின் இருப்பை பாதுகாக்க வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் யாத்திரிகர்களை வழியனுப்பும் நிகழ்வில் கலந்துகொண்டார்.
