LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, June 23, 2019

இந்த ஆண்டுக்குள் ஆட்சியைக் கவிழ்க்க எதிரணி தீவிரம் – ராஜித

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஆட்சியை இந்த ஆண்டுடன் கவிழ்த்து விடலாம் என எதிரணி தீவிரம் காட்டிவருவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

எனினும் அவர்களின் எதிர்பார்ப்பு தோல்வியடைந்துள்ளது எனத் தெரிவித்த, ஆட்சியை கவிழ்ப்பதற்காகவே நாட்டில் இனவாதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை உருவாக்குவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தெரிவிக்கையில், “நாட்டில் காணப்படும் நெருக்கடி சூழ்நிலையில் எதிர்வரும் தேர்தலில் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் சிலர் வேட்பாளராக செயற்பட உள்ளனர்.

அரசாங்கத்துக்கு ஆதராவாக செயற்படும் பிரபல்யமான அமைச்சர்கள் யாராவது இருந்தால் அவர்களுக்கு எதிராக செயற்படுவதே இவர்களின் பிரதான நோக்கமாக காணப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான இந்த ஆட்சியை ஆண்டுடன் கவிழ்த்து அரசாங்கத்துக்கு எதிராக எவ்வளவு சூழ்ச்சி செய்தாலும் சர்வதேச உதவிகள் எமக்கு கிடைத்த வண்ணமே உள்ளன.

ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகள் பொருளாதார ரீதியில் பாரிய உதவிகளை வழங்கியுள்ளன. இந்த இரண்டு நாடுகளும் குறைந்த வட்டி வீதத்திலேயே எமக்கு கடன் உதவிகளை வழங்கியுள்ளன.

ஆகவே இந்த அரசாங்கத்தைப் பற்றி எமது மக்கள் என்ன கூறினாலும் சர்வதேசம், கடந்த அரசாங்கத்தை விட தற்போதைய அரசாங்கத்தை சிறந்த அரசாங்கமாக கருதுகிறது” என்று குறிப்பிட்டார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7