LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, May 23, 2019

நான் சிந்தித்து கூறியவை அனைத்தும் உண்மையாகிவிட்டன – ஞானசார தேரர்

நான் நாடு தொடர்பில் சிந்தித்து கூறியவை அனைத்தும் உண்மையாகிவிட்டன என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

சிறையிலிருந்து இன்று (வியாழக்கிழமை) விடுதலை பெற்ற பின்னர் ருக்மல்கம விகாரைக்கு சென்றிந்தபோது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தெரிவிக்கையில், “நான் இப்போது மிகவும் களைப்புற்றுள்ளேன். நான் நாடு குறித்து சிந்தித்து கூறியவை அனைத்தும் உண்மையாகிவிட்டன. இதனால் கவலையடைகின்றேன்.

எதிர்வரும் நாட்களில் பிரித், தியானம் உள்ளிட்ட ஆன்மீகத்திலேயே எனது வாழ்க்கையை கழிக்கலாம் எனத் தீர்மானித்துள்ளேன்” என அவர் தெரிவித்தார்.

சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறையிலிருந்து இன்று (வியாழக்கிழமை) விடுவிக்கப்பட்டார்.

பொது மன்னிப்பு வழங்கி ஜனாதிபதி கையொப்பமிட்ட கடிதம் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு இன்று வழங்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் விடுதலையானார்.

ஞானசார தேரரை வரவேற்பதற்காக அதிகளவிலான தேரர்கள் மற்றும் பொதுமக்கள் வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்தை சூழ காத்திருந்தனர்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டார். இதையடுத்து 2018 ஓகஸ்ட் 8 ஆம் திகதி நீதிமன்றம் 6 வருடங்கள் கடூழிய சிறைத் தண்டனையை அவருக்கு விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7