வெசாக் தினக் கொண்டாட்டங்கள் உலகெங்கும் களைகட்டி வருகின்றது.வெசாக் தினம், புத்தரின் பிறப்பு, ஞானம் பெற்றது, வீடுபேறு அடைந்தது ஆகியவற்றைக் குறிக்கும் நாள்.
பௌத்தர்கள் பௌத்த ஆலயங்களில் சென்று சிறப்பு வழிபாட்டில் ஈடுபடுவர்.
இந்தியா
புத்தரின் 2563ஆம் ஆண்டு பிறந்தநாளை அனுசரிக்கும் பௌத்த பிக்குகள் பெங்களூரில் புனித போதி மரத்தை வலம் வந்தனர்.
வியட்நாம்
ஹனோய் நகரின் புறநகர்ப் பகுதியான சன் டேயிலுள்ள பௌத்த ஆலயத்தில் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.
பெரிய அளவிலான புத்தரின் சிலை அங்கு எழுப்பப்பட்டு வருகிறது.







