
பிரதமரின் அழைப்புக்கு இணங்க இந்த சந்திப்பு இன்று (சனிக்கிழமை) அலரிமாளிகையில் இடம்பெற்றது.
இதன்போது, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பின்னர் நாட்டின் பாதுகாப்பு நிலமை, தாக்குதலினை தவிர்ப்பதற்கு தவறியமை குறித்தும் அரசியல் மற்றும் நிறுவனங்களின் பொறுப்புக்கள் குறித்தும் சிவில் சமூக உறுப்பினர்கள் பிரதமரிடம் விளக்கம் கேட்டனர்.
இந்நிலையில் இது குறித்து, தேடியறிவதற்கென நாடாளுமன்ற தெரிவுக் குழுவொன்று நியமிக்கப்பட்டிருப்பதாகவும், அதன் நடவடிக்கைகளை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு ஊடகங்களுக்கு வெளிப்படுத்துவதற்கு சபாநாயகர் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.
