சூழலில் ஜனாதிபதியின் செயற்பாடுகள் தீவிரமாக இல்லையென தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், தற்கொலை குண்டுதாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாரவாதம் உருவானமைக்கான காரணத்தை அறியாமல் இந்த அச்சுறுத்தலை ஒழிப்பது என்பது கடினமானதாகும் என கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்தார்.
சமநிலைக்கான தேசிய சக்தி அமைப்பினால் இன்று (வியாழக்கிழமை) ராஜகிரியவில் அமைந்துள்ள தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைமை காரியலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டடிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலின் பின்னணி பற்றி இதுவரை தகவல் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த தாக்குதல் நாட்டை பழிவாங்கும் நோக்கிலா அல்லது நாட்டை கைப்பற்றும் நோக்கிலா மேற்கொள்ளப்பட்டது என்பது பற்றிய தகவல் எவையும் இதுவரை தெரியவில்லை.
இந்த தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட 150பேரில் 120 பேரை கைது செய்துள்ளதுடன் இந்த பிரச்சினைக்கு நூற்றுக்கு தொண்ணூறு வீதம் தீர்வு எட்டப்பட்டுவிட்டதாக ஜனாதிபதி சாதாரணமாக கூறுகின்றார். இந்த விடையத்தினை அவர் மிகவும் சாதாரணமாக பார்ப்பதை அவரின் செயற்பாடுகளிலிருந்து தெரிகின்றது.
இந்த தாக்குதல் சம்பவத்தின் போது சிங்கப்பூரில் இருந்த ஜனாதிபதி நாடு திரும்பியதும் அவருடைய மகனின் திருமணம் பற்றியே சிந்தித்தார். அவருடைய செயற்பாட்டினையே மற்றைய அரசியல்வாதிகளும் பின்பற்றுகின்றனர்” என்று அவர் தெரிவித்தார்.
