தொடர்ந்து நடத்ததாது மாபெரும் தவறு என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அவ்வகையில், பாதுகாப்பு சபை சுமார் இரண்டு மாதங்களாகக் கூடவில்லை என்பதே நகைப்புக்குரியது என குறிப்பிட்டுள்ள அவர், அதற்குப் பொறுப்பான தலைவரும் இதுகுறித்து வெகுவாக ஆர்வம் காட்டவில்லை என குற்றஞ்சுமத்தினார்.
தங்காலையில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும், இவ்வாறான விடயங்களால், அனைத்தும் மிகச் சுலபமாகக் கிடைத்துவிட்டமையே இன்றைய சூழலுக்குப் பிரதான காரணமென சுட்டிக்காட்டியுள்ள அவர், இத்தகைய சூழ்நிலைகள் பற்றிய போதிய தெளிவின்மையும் காரணமாக அமைந்துள்ளது என்று மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வாரத்திற்கு ஒருமுறை தேசிய பாதுகாப்பு சபை கூடுவது வழக்கமாகக் காணப்பட்டதாகவும், அதனாலேயே யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரவும் முடிந்தது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அக்கூட்டத்தில் யுத்தத்தின் அவ்வப்போதையநிலை தொடர்பாக புலனாய்வுப்பிரிவினர் தகவல்களை வழங்கினார்கள். யுத்தம் முடிவடைந்த பின்னரும் எனது ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு சபைக் கூட்டங்கள் முறையாக நடைபெற்றது






