LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, May 30, 2019

வவுனியாவுக்கு நள்ளிரவில் அழைத்துவரப்படும் வெளிநாட்டு அகதிகள்

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து
இலங்கைக்கு வந்துள்ள அகதிகளில் மேலும் ஒரு தொகுதியினரை வவுனியாவுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவ்வகையில், இன்று இரவு ஒரு மணியளவில் வவுனியாவுக்கு குறித்த அகதிகள் அழைத்துவரப்படவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் இருந்து ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் அழைத்து வரப்படவுள்ள இவ் அகதிகளில் சுமார் 77பேர் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கடந்த 22ஆம் திகதி 35 அகதிகள் வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமிற்கு நீர்கொழும்பில் இருந்து அழைத்துவரப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

வடக்கின் அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களின், பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் இந்த நகர்வு இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7