இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளாக வந்த ஜேர்மன் பிரஜைகள் குழுவினர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மென்பானம் (தன்சல்) வழங்கியுள்ளனர்.சுற்றுலா பயணிகளின் செலவில் தம்புள்ள பகுதியில் உள்ள சில உள்ளூர் இளைஞர்களின் உதவியுடன் இந்த தானசாலை (தன்சல்) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க ரங்கரி தம்புள்ள ராஜ மகா விஹாரையில் தங்கள் பிரார்த்தனைகளை முடித்துக்கொண்டு திரும்பி வந்த பக்தர்களுக்கு அவர்கள் மென்பானங்கள் வழங்கிவைத்தனர்.
மேலும் சமீப காலங்களாக நாட்டில் ஏற்பட்ட ஸ்திரமற்ற சூழ்நிலைகளை தொடர்ந்தும் வெசாக் பண்டிகை வெற்றிகரமாக கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையின்போது வளமை போன்றே பல வெளிநாட்டவர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








