LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, May 19, 2019

திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு!

திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்றது.

இந்த நிகழ்வு திருகோணமலை மாவட்ட தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் இளைஞர்களது ஏற்பாட்டில் மாவட்டத்தில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் முள்ளிவாய்க்கால் பகுதியில் கஞ்சியை உணவாக உட்கொண்ட நினைவை மீட்டும் வகையிலேயே இவ்வாறு கஞ்சி வழங்கப்பட்டது.

இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களது 10ஆவது ஆண்டை நினைவுகூரும் நிகழ்வாக இது முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, குறித்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களிலும் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7