LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, May 26, 2019

தற்கொலைதாரியின் தொழிற்சாலை ஊழியர்களின் விசாரணை சி.ரி.ஐ.டி.க்கு மாற்றம்!

சினமன் கிராண்ட் ஹோட்டலில் தாக்குதல் நடத்திய தற்கொலைதாரியின் தொழிற்சாலை ஊழியர்களின் விசாரணை சி.ரி.ஐ.டி.யினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சினமன் கிராண்ட் ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்திய மொஹம்மட் யூசுப் இல்ஹாம் அஹமட்டுக்கு சொந்தமான குண்டு தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் வெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலையில் சேவையாற்றிய ஊழியர்கள் 8 பேர் குறித்த விசாரணைகள் பொலிஸ் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த 8 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அந்த விசாரணைகள் வெல்லம்பிட்டி பொலிஸாரிடமிருந்து சி.ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனயவுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் உயரதிகாரி ஒருவர் கூறினார்.

இதேவேளை, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள குறித்த சந்தேகநபர்களை நாளை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7