இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், மகாத்மாவின் படுகொலையை இந்து தீவிரவாதம் என தேர்தல் பரப்புரைகளில் பேசுவது விஷமத்தனமானது மட்டுமன்றி ஆபத்தானது எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மத உணர்வுகளை தூண்டி கலவரத்தை ஏற்படுத்த நினைக்கும் கமல் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
எவ்வாறாயினும் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியிருப்பது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.