
அரிசி இறக்குமதியில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பான விசாரணைக்காக முன்னிலாயாகியிருந்த அவர் நிதி மோசடி தொடர்பான விசாரணைப் பிரிவினரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
நிதி மோசடி விவகாரம் – FCID யில் ரிஷாட் முன்னனிலை (முதலாம் இணைப்பு)
257,000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதியில் நிதி மோசடி தொடர்பான விசாரணைக்காக வாக்கும்மூலம் வழங்க அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நிதிமோசடி விசாரணை பிரிவில் ஆஜராகியுள்ளார்.
சதொசவில் கடந்த 2014/15 இல் 257,000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதியில் நிதி மோசடி இடம்பெற்ற விவகாரம் தொடர்பாகவே அவர் வாக்குமூலம் வழங்க ஆஜராகியுள்ளார்.
அவர் நிதிமோசடி விசாரணை பிரிவில் இன்று (சனிக்கிழமை) காலை ஆஜராகியிருந்தமையினை பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர உறுதிப்படுத்தியுள்ளார்.
