மொரட்டுமுல்ல பகுதியில் வைத்து சந்தேக நபர் கொழும்பு பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது மொரட்டுவை பகுதியை சேர்ந்த 41 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடமிருந்து இரண்டு கிலோகிராமிற்கும் அதிக நிறையுடைய ஹெரோயின் மற்றும் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை மொரட்டுவை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
