இந்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதம் இன்று(செவ்வாய்கிழமை) நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.
இந்த குழுநிலை விவாதத்தில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அரசாங்கம் எந்த சலுகையையும் வழங்குவதில்லை. அவர்களை ஊக்குவிக்கும் எந்த வேலைத்திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை. அதனால்தான் முதலீட்டாளர்கள் வருவதில்லை.
இந்த அரசாங்கத்தின் பிரதான இயக்குநராக மலிக் சமரவிக்ரமவே செயற்படுகின்றார். அவரது அமைச்சின் கீழே சர்வதேச வர்த்தகம் இருக்கின்றது.
எனினும் அவருக்கு இருக்கும் வெளிவேலைகள் காரணமாக சர்வதேச வர்த்தக அமைச்சின் வேலைத்திட்டங்களை மேற்கொள்ள முடியாதுள்ளது.
அதனால் பொருத்தமான ஒருவருக்கு இந்த அமைச்சை கையளித்து ஒதுங்கிக்கொள்ள வேண்டும்’ என அவர் வலியுறுத்தியுள்ளார்.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)