LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, April 24, 2019

குண்டுத்தாக்குதல்கள் குறித்து கவலை வெளியிட்டது இந்து குருமார் அமைப்பு!

இலங்கையில் ஐ.எஸ் தீவிரவாதிகளினால் மே
ற்கொள்ளப்பட்டுள்ள தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதலுக்கு இந்து குருமார் அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது.

இந்து குருமார் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.

சமூக ஒருங்கிணைப்பையும் சமூக நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் இறையருள் நிறைந்த இடங்களில் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பில் கவலையடைவதாக இந்து குருமார் அமைப்பு தெரிவித்துள்ளது.

நாட்டின் அமைதியையும் சமாதானத்தினையும் சமூக ஒற்றுமையையும் சீர்குலைக்கும் நிகழ்வாக இது அமைந்துள்ளது எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த அனைத்து ஆத்மாக்களும் சாந்தி பெறுவதற்காக பிரார்த்திப்பதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சம்பவங்களின் போது, இலங்கையில் அமைதியை நிலைநாட்ட அமைதியுடனும் ஒற்றுமையுடனும் அனைவரும் ஒன்றுபட வேண்டும் எனவும் இந்து குருமார் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7