LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, April 17, 2019

வடக்கின் முக்கிய அபிவிருத்திகள் குறித்து இரு நாட்டு தூதுவர்களுடன் ஆளுநர் கலந்துரையாடல்

வடக்கு ஆளுநருக்கும் கனேடிய உயர்ஸ்தானிகர் மற்றும் ஈரான் தூது
வர் ஆகியோருக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் Mr.Devoid McKinnonக்கும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் இடையிலான இச்சந்திப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை கொழும்பில் இடம்பெற்றது.

வடமாகாணத்தில் கனேடிய அரசாங்கத்தினால் மேற்கொள்ளக் கூடியதான அபிவிருத்தி உதவிகள் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் கனேடிய அரசாங்கத்தின் ஆசிய விவகாரங்களுக்கான பணிப்பாளரின் இலங்கை வருகை குறித்தும், இவ்வருகையின்போது கனேடிய அரசாங்கத்தினால் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கக் கூடியதான நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

இதேவேளை, ஆளுநருக்கும் இலங்கைக்கான ஈரான் தூதுவர் Mr.Mohammad Zaeri Amiraniக்கும் இடையிலான சந்திப்பு இன்று மாலை கொழும்பிலுள்ள ஈரானிய தூதரகத்தில் இடம்பெற்றது.

இதன்போது, வடமாகாணத்தின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டுமென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கரிசனைக்கும் தொலைநோக்கிற்கும் அமைய மத்திய மாகாணத்திலிருந்து நிலக்கீழ் குழாய் வழியாக வட. மாகாணத்திற்கு குடிநீரினைக் கொண்டுவருவதற்கு ஈரானிய அரசின் உதவி இதன்போது ஆளுநரால் கோரப்பட்டது.

இதற்கு சாதகமான சமிக்கையை வெளியிட்ட ஈரானியத் தூதுவர், முதற்கட்டமாக இது குறித்த சாத்தியமான வழிகளை ஆராயும் பொருட்டு இத்துறையில் நிபுணத்துவம் பெற்ற ஈரானின் மூன்று நிறுவனங்களை எந்தவித கட்டணங்களும் இல்லாமல் தன்னார்வ ரீதியில் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குறிப்பிட்டார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7