LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, April 24, 2019

ஐ.எஸ் தீவிரவாதிகளின் தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு தொடர்ந்தும் சிகிச்சை!

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற
குண்டுத்தாக்குதலில் படுகாயமடைந்தவர்களில் 32 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கலாரஞ்சினி கணேசலிங்கம் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் படுகாயமடைந்த 69 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 26பேர் சிகிச்சைபெற்று வீடு திரும்பியுள்ளனர்.

ஐந்து பேர் வைத்தியர்களின் அனுமதியின்றி வெளியேறிச்சென்றுள்ளதுடன் இரண்டு பேர் கண்டி மற்றும் அனுராதபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் 04 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், ஒருவர் மருத்துவரின் சிகிச்சைக்கு எதிராக வெளியேறிச் சென்றுள்ளதாகவும் வைத்திய பணிப்பாளர் தெரிவித்தார்.

தற்போது சிகிச்சைபெறும் 32 பேரும் வைத்தியசாலையின் பல்வேறு விடுதிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாகவும் வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.

உயிரிழந்த 26 பேரில் சடலங்களும் நேற்று உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, இன்று காலை இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெறுவோரை நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறியுள்ளார்.

இதன்போது காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறும் மேலதிக தேவைப்பாடுகள் தொடர்பாக அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7