LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, April 3, 2019

தமிழகம், புதுவையில் அகோரமாகும் அனல்காற்று – வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு வரண்ட வானிலையே காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சென்னை உட்பட 12 மாவட்டங்களுக்கு அனல்காற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை ஆகிய 12 மாவட்டங்களிலும் பகல் நேரத்தில் அனல்காற்று வீசும். அத்துடன் வெயில் 98.6 டிகிரி வரை பதிவாகும் என்று தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கோடை வெயில் கொளுத்துகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியவில்லை. இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு வரண்ட வானிலையே காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அனல்காற்று வீசுவதால் நண்பகல் நேரத்தில் பயணத்தை தவிர்க்குமாறும், அதிகப்படியான நீர் மற்றும் நீர்ச்சத்துள்ள பழங்களை உண்ணுமாறும் வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7