LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, April 1, 2019

தவறை திருத்திக்கொள்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு சந்தர்ப்பம் – மஹிந்த அணி

தவறை திருத்திக்கொள்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

பத்தரமுல்ல – நெலும் மாவத்தையில் இன்று(திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அந்த கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் மீதான வாக்கொடுப்பின்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாக அல்லது எதிராக வாக்களிப்பதா என்ற நிலைப்பாட்டுக்கு வரவேண்டும்.

2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு நிறைவுபெற்று 5 நாட்களின் பின்னரே, ஐ.தே.கவுக்கு எதிரான பாரிய கூட்டணி ஒன்றை அமைப்பது தொடர்பாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கவுள்ளது.

வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின்போது அதற்கு எதிராக வாக்களிப்பதாக எங்களிடம் சுதந்திரக் கட்சி உறுதியளித்திருந்த நிலையில், வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை என்பதால், அக்கட்சி மீதான அவநம்பிக்கை தமக்குள் ஏற்பட்டிருக்கிறது.

ஆகவே இந்த தவறை சுதந்திரக் கட்சி திருத்திக்கொள்வதற்கு 5 ஆம் திகதி சந்தர்ப்பம் ஒன்று கிடைத்துள்ளது’ என தெரிவித்துள்ளார்

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7