LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, April 11, 2019

இந்திய நாடாளுமன்றத் தேர்தல்: விறுவிறுப்பாக இடம்பெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவு

17ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முதற்கட்டமாக 91 தொகுதிகளில் தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் விறுவிறுப்பாக இன்று (வியாழக்கிழமை) நடந்து முடிந்தது.

நாடு முழுவதும் உள்ள 543 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு இன்று தொடங்கி அடுத்த மாதம் 19ஆம் திகதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. மேலும், ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநில சட்ட சபைகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் முன்னதாகவே வாக்குப்பதிவு மையங்களுக்கு ஆர்வமுடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

அத்துடன் ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய மாநிலங்களின் அனைத்து தொகுதிகளுக்கும் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று ஒரே நாளில் நடைபெற்றது.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது.

அனைத்து மாநிலங்களிலும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது. ஒரு சில இடங்களில் வாக்குச்சாவடி மையங்களில் அடிதடி, வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு உள்ளிட்ட சம்பவங்களும் நடைபெற்றுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7