LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, April 24, 2019

தீவிரவாதத்தை ஒழிக்க இலங்கையுடன் கைகோர்க்க தயார்!- இந்தியா

தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு தேவையான அனைத்து
உதவிகளையும் வழங்க தயாரென பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களினால் 310க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளதுடன் 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் உலக நாடுகள் அனைத்தும் குறித்த சம்பவத்துக்கு கடும் கண்டனத்தை வெளியிட்டு வருகின்றன.

இலங்கை அரசு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே, மோடி இவ்வாறு உறுதியளித்ததாக கூறப்பட்டுள்ளது.அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பிரதமர் நரேந்திர மோடி, இச்சம்பவங்களை தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, தொலைபேசியில் தொடர்பினை ஏற்படுத்தி உரையாற்றியுள்ளார்.

இதன்போது தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்ததுடன் பயங்கரவாதத்தை ஒழிக்க முழு ஒத்துழைப்பை வழங்குவேன் எனவும் அவர் உறுதியளித்தார்.

மேலும் இரு நாடுகளுக்கிடையிலான நல்லுறவு தொடர்ந்து பலமாக முன்னெடுக்கப்படும் எனவும் மோடி கூறியதாக இலங்கை அரசு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7