LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, April 19, 2019

மட்டக்களப்பில் குண்டுவெடிப்பு – பல்வேறு கோணங்களில் விசாரணை

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள தாழங்குடா வேடர் குடியிருப்பு பகுதியிலுள்ள வெற்றுக் காணியொ
ன்றில், குண்டுவெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் பல்வேறு கோணங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக குறித்த காணியின் உரிமையாளர், காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து, காத்தான்குடி பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் நேற்று (வியாழக்கிழமை) குறித்த இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இனந்தெரியாதோரால் மோட்டார் சைக்கிளொன்றில் குண்டு வைக்கப்பட்டு, இக்காணியில் வெடிக்கச் செய்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால் இக்காணியின் சுற்றுவேலி சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். அத்தோடு சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7