LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, April 14, 2019

ஆப்கானில் நகரைக் கைப்பற்றும் முயற்சி முறியடிப்பு – 37 தலிபான்கள் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் குன்டுஸ் நகரை கைப்பற்றும்
தலிபான்களின் முயற்சியை இராணுவத்தினர் முறியடித்துள்ளனர். அத்துடன் மற்றொரு பகுதியில் 27 தலிபான்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இன்று (சனிக்கிழமை) அதிகாலை குன்டுஸ் நகரின் வடக்கு பகுதியை சுற்றி வளைத்து தலிபான்கள் கைப்பற்ற முயன்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு கூடுதலான இராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

சோதனைச் சாவடிகளின் அருகே இரு தரப்பினருக்கும் இடையில் இன்று பிற்பகல் வரை நீடித்த துப்பாக்கிச் சண்டையில் தலிபான்கள் பின்வாங்கி சென்றதால் அவர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டதாக குன்டுஸ் மாகாண பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த மோதலில் பத்துக்கும் அதிகமான தலிபான்கள் மற்றும் பொதுமக்களில் இருவர் உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இதேபோல், நாட்டின் கிழக்கு பகுதியில் நன்கார்ஹர் மாகாணத்திற்குட்பட்ட ஷிர்ஸாத் மாவட்டத்தில் இராணுவத்தினர் மீது கார் குண்டு மூலம் தாக்குதல் நடத்த வந்த தலிபான்களுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையில் நேற்று நள்ளிரவில் நடந்த மோதல்களில் 27 தலிபான்கள் கொல்லப்பட்டதாக நன்கார்ஹர் மாகாண ஆளுநர் அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது.

பயங்கரவாதிகள் மீது ஈவிரக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டின் இராணுவம், பொலிஸார் மற்றும் கூட்டுப்படைகளுக்கு அதிபர் அஷ்ரப் கானி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7