ஒன்ராறியோவின் ப்றொக் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று (வியாழக்கிழமை) இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலில் இருவர் கத்திக்குத்துக்கு இலக்கானதுடன், ஒருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உள்ளனர்.
காயமடைந்த மூவரும் உள்ளூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நயகரா பிராந்திய பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
ஏழு பீடங்களை கொண்ட ப்றொக் பல்கலைக்கழகத்தில் 19 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் கல்வி கற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.