LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, March 20, 2019

சுயநிர்ணய உரிமையை அடைவதற்கு தமிழ்த் தேசம் தொடர்ந்தும் போராடுகின்றது – கஜேந்திரகுமார்

சுயநிர்ணய உரிமையை அடைவதற்கு தமிழ்த் தேசம் தொடர்ந்தும் போராடுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற இலங்கை குறித்த விசேட உபகுழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “சுயநிர்ணய உரிமையை வெறுமனே ஒரு குறியீட்டுப் பொருளாக மட்டும் ஐக்கிய நாடுகளும் இந்த அவையும் தொடர்ந்தும் அணுகுமேயானால் சுயநிர்ணய உரிமைக்காக உண்மையில் போராடிக்கொண்டிருக்கின்ற அனைவரும் தொடர்ந்தும் இலக்குவைக்கப்படுவார்கள்.

அத்துடன் இலங்கை அரசின் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை எதிர்கொண்டு நிற்கும் தமிழ்த் தேசமானது தம் சுயநிர்ணய உரிமையை அடைவதற்காக இலங்கையில் தொடர்ந்தும் போராடிக்கொண்டிருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7