LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, March 14, 2019

மாகந்துர மதூஷை கைது செய்வதை தடுக்குவகையில் உயர் நீதிமன்றத்தில் மனு!

பாதாள உலக கும்பலின் தலைவன் மாகந்துர மதூஷை கைது செய்வதை தடுக்கும் வகையில் இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாகந்துர மதூஷின் தாயின் சகோதரியான சூரியவெவ பகுதியை சேர்ந்த ஏ.டபிள்யூ சிறியானி என்பவரே மனு தாக்கல் செய்துள்ளார்.

குறித்த மனுவின் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர், பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவின் நிலையப்பொறுப்பதிகாரி உட்பட ஐவரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது டுபாயில் உள்ள மாகந்துர மதூஷ் என்பவரை கைது செய்வதற்கு பொலிஸார் அடிப்படையற்ற விதத்தில் செயற்படுவதாகவும், இதன் காரணமாக அவரது அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக தீர்ப்பளிக்குமாறும் மாகந்துர மதூஷை கைது செய்வதை தடுக்குமாறு தடை உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7