LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, March 19, 2019

‘நானும் காவலன்தான்’ – தேர்தல் களத்தில் மோடியின் புதிய வியூகம்

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவருகின்ற நிலையில் பிரதான கட்சிகளிடையே கடும் போட்டியில் பிரசார நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு கட்டமாக நாடு முழுவதும் உள்ள 500 பகுதி மக்களுடன் ‘நானும் காவலாளிதான்’ என்ற தலைப்பில் பிரதமர் மோடி கலந்துரையாடவுள்ளார்.

அவ்வகையில், முதற்கட்டமாக வரும் 31ஆம் திகதி பா.ஜ.க. தொண்டர்கள் மற்றும் பொது மக்களிடையே வீடியோ  காட்சி மூலம் பிரதமர் மோடி கலந்துரையாடவுள்ளதாக பா.ஜ.க. தெரிவித்துள்ளது

ரபேல் ஒப்பந்த விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தார். ‘காவலாளி ஒரு திருடன்’ என்று விமர்சித்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘நானும் காவலன்தான்’ என்னும் புதிய பிரசார வீடியோவை வெளியிட்டார்.

மேலும் அந்த பதிவில் ‘‘உங்கள் காவலன் தேசத்துடன் துணை நிற்கிறார். நான் தனி ஆள் கிடையாது. யாரெல்லாம் ஊழல், சமூக கொடுமைகளை எதிர்த்து போராடுகிறார்களோ அவர்கள் எல்லோரும் காவலன்தான்’’ என்று குறிப்பிட்டார்.

தனது டுவிட்டர் பக்கத்தின் பெயரையும் பிரதமர் மோடி மாற்றியுள்ளார். ‘காவலன் நரேந்திர மோடி’ என்று மாற்றம் செய்துள்ளார்.

இதேபோல் பா.ஜனதா தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க.வை மாநில அமைச்சர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பா.ஜ.க. பிரமுகர்களும் தங்களது டுவிட்டர் கணக்குகளில் தங்களது பெயர்களுக்கு முன்னால் ‘காவலாளி’ (சௌகிதார்) என்ற அடைமொழியை இணைத்துள்ளனர்.

இந்நிலையில், நானும் ஒரு காவலாளி என்ற அடைமொழியை வீடியோ பிரசாரமாக முன்னெடுத்துச் செல்ல பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7