LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, March 21, 2019

ஒரு ஆவணத்தை கூட தயாரிக்க அரசாங்கத்தால் முடியவில்லையா ஜே.வி.பி கேள்வி!

ஒரு ஆவணத்தை கூட தயாரிக்க அரசாங்கத்தால் முடியவில்லையா என மக்கள் விடுதலை முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.

ஆரம்பக் கைத்தொழில், சமூக வலுவூட்டல் அமைச்சு, பொது வழங்கல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு பற்றிய அமைச்சரவை அந்தஸ்த்தற்ற அமைச்சு, விசேட பிரதேசங்கள் அபிவிருத்தி பற்றிய அமைச்சரவை அந்தஸ்த்தற்ற அமைச்சு ஆகிய அமைச்சுகள் தொடர்பான குழுநிலை விவாதம் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்றது.

இந்த குழுநிலை விவாதத்தில் பங்கேற்று கருத்து வெளியிட்ட போதே மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜெயதிஸ்ஸ இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அர்ஜுன் மகேந்திரனை இலங்கைக்கு கொண்டுவர சிங்கபூர் பிரதமர் ஒத்துழைப்பு வழங்கவில்லை என ஜனாதிபதி கூறுகின்ற போதிலும் சிங்கபூர் சட்ட விதிமுறைகளுக்கு அமைவாக ஆவணங்கள் இலங்கை சமர்ப்பிக்கவில்லை என்றே சிங்கபூர் அரசாங்கம் கூறியுள்ளது.

ஒரு ஆவணத்தை கூட தயாரிக்க அரசாங்கத்தால் முடியவில்லையா, ஆகவே இது குறித்து அரசாங்கம் பதில் கூற வேண்டும்“ என தெரிவித்துள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7