LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, March 15, 2019

சிலாவத்துறையில் கடற்படையினரை வெளியேற்றக்கோரி மக்கள் பாரிய ஆர்ப்பாட்டப்பேரணி!

சிலாவத்துறையில் கடற்படையினரை வெளியேற்றக்கோரி மக்கள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடற்படை முகாமுக்கு முன் 24 நாட்களாகவும் போராட்டம் தொடர்கின்றநிலையில் இன்று குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிலாவத்துறையில் மக்களின் காணிகளில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை அகற்றி தமது காணிகளை வழங்கக் கோரியே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சிலாவத்துறையில் உள்ள இரண்டு பள்ளிவாசல்களில் இருந்து பல நூற்றுக்கணக்கான முஸ்ஸீம் மக்கள் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு கடற்படை முகாமை நோக்கி பேரணியாகச் சென்றனர்.

பின்னர் சிலாபத்துறையில்  24 நாட்களாக போராட்டம் இடம்பெறும் பகுதிக்குச் சென்ற மக்கள் வீதிக்கு அருகில் நின்று கோசமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக மக்களின் காணிகளில் உள்ள கடற்படையினரை வெளியேற்றி குறித்த காணியை மீண்டும் மக்களுக்கு வழங்கக்கோரி போராட்டத்தை முன்னெடுத்தனர். குறித்த போராட்டத்தில் உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், மன்னார் பிரஜைகள் குழு, மன்னார் மெசிடோ நிறுவனம், தேசிய மீனவ ஒத்துழைப்புப் பேரவை போன்றவற்றின் பிரதி நிதிகளும் கலந்துகொண்டு ஆதரவு வழங்கியதோடு, மன்னாரில் இருந்தும் மக்கள் சென்று ஆதரவு வழங்கினர்.

முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிலாவத்துறையில் மக்களின் காணிகளில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை அகற்றி தமது காணிகளை வழங்கக் கோரி பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த மாதம் 20 ஆம் திகதி முதல் தொடர் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

யுத்தத்தின் போது முசலி பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் தாங்கள் மீண்டும் முசலி பகுதிக்கு மீள் குடியேற்றப்படுவோம் என்ற நம்பிக்கையில் வந்தும் கடற்படையினர் எமது காணிகளை ஆக்கிரமித்திருப்பதால் 218 மேற்பட்ட குடும்பங்கள் மீள் குடியேற முடியாத நிலையில் உள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.

218 குடும்பங்களுக்குச் சொந்தமான 35 ஏக்கர் நிலப்பரப்பை கடற்படையினர் சுவீகரித்துள்ளதோடு, கடற்படை முகாமும் அமைக்கப்பட்டுள்ளது. குறித்த காணியை விடுவித்துத் தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்த போதும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை. இந்நிலையில் 24 ஆவது நாளான இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7