
‘brain bolt’ எனப்படும் குறித்த தொழில்நுட்ப கருவியை நோயாளியின் மண்டை ஓட்டில் பொருத்தி மனித மூளையின் செயற்பாட்டை தத்ரூபமாக கண்டறிந்து கொள்வதற்கு முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆண்டு தோறும் வாகன விபத்துக்கள், விழுதல் போன்ற அனர்த்தங்களினால் சுமார் 160000 கனேடியர்களின் மூளைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மூளை பாதிப்புக்கு இலக்கான ஒரு மில்லியன் வரையிலான கனேடியர்கள் பேசுவதற்கு, நடப்பதற்கு, பார்ப்பதற்கு முடியாத நிலையில் இருக்கின்றார்கள். இதனால் இவர்களின் குறையை தீர்ப்பதற்கு இந்த கருவி பெரும் உதவியாக இருக்கும் என நம்பப்படுகின்றது
