மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு படையினர் உத்தியோகபூர்வமாக
கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது
கிழக்கு மாகாண ஆளுநர் எம் எல் எ எ, .ஹிபுல்லாவின் விசேட அனுமதிக்கமைய கிழக்கு மாகாண உள்ளூராட்சி
மன்றங்களில் தீயணைப்பு பிரிவுகளுக்கு இணைக்கப்பட்ட தீயணைப்பாளர்கள் 66 பேருக்கு நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது
இதற்கு அமைய மட்டக்களப்பு மாநகர சபைக்கு தீயணைப்பு படையினராக இணைத்துக்கொள்ளப்பட்ட 13
தீயணைப்பாளர்கள் உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வும் கடமைகளுக்கான சத்தியபிரமாணம்
செய்யும் நிகழ்வும் மாநகர முதல்வரின் அலுவலகத்தில் நடைபெற்றது .
மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் மற்றும் மாநகர
ஆணையாளர் கே .சித்திரவேல் ,முன்னிலையில் நடைபெற்ற சத்தியபிரமான நிகழ்வில் மாநகர் பிரதி
முதல்வர் கே .சத்தியசீலன் ,பிரதி ஆணையாளர் என் .தனஞ்சயன் ,,கணக்காளர்
திருமதி .ஜி எச் .சிவராஜா , மாநகர பொறியியலாளர் தேவதீபன் ,.மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் ,கலந்துகொண்டனர்