
இன்று மாலை வாகா எல்லை வந்தடைந்த அபினந்தனை இந்திய மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். ஆனால், அவரை ஒப்படைப்பதில் காலதாமதம் ஏற்பட்டது.
இதையடுத்து, இரவு 9 மணிக்கு ஒப்படைக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இந்நிலையில், இரவு 9 மணியளவில் பாகிஸ்தான் அதிகாரிகள் தமிழக வீரர் அபினந்தனை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
எல்லையை வந்தடைந்த விமானியை இந்திய விமானப்படையின் உயர்மட்ட அதிகாரிகளான பிரபாகரன் மற்றும் ஆர்.ஜி.கே.கபூர் ஆகியோர் வரவேற்றுள்ளனர்.
