காசாவில் எகிப்திய இராணுவம் மேற்கொண்ட இரண்டு சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் ஏழு சந்தேகத்திற்கிடமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என உள்துறை அமைச்சு இன்று (வியாழக்கிழமை) உறுதிப்படுத்தியுள்ளது.மூன்று போராளிகள் வெடிகுண்டுகளை தயாரிப்பதற்காக மின் தொழிலாளர்கள் என்று தங்களை மாற்றிக்கொண்டு ட்ரக் ரக வாகனத்தில் செல்ல முற்பட்டபோது, அவர்களை வழிமறித்து பரிசோதனை செய்தவேளை துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.
இதன் போது மூன்று தீவிரவாதிகள் உயிரிழந்ததாக தெரிவித்த உள்துறை அமைச்சு, இதில் பொலிஸார் அதிகாரியொருவர் காயமடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை அவர்கள் பயன்படுத்தும் ஒரு குடியிருப்பு ஒன்றினை பாதுகாப்பு படையினர் சோதனை மேற்கொண்டபோது நான்கு பேர் கொல்லப்பட்டனர் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.





