சோமாலியா அரசுக்கு சொந்தமான அமைச்சின் கட்டடத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் தொழிலாளர் நலத்துறை துணை அமைச்சர் சக்கர் இபுராஹிம் அப்தல்லாவும் உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதலுக்கு அல்-ஷபாப் அமைப்பு உரிமை கோரியுள்ளது.
படுகாயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் இத்தாக்குதலில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
சோமாலியா நாட்டில் ஆளும் அரசை நீக்கி விட்டு இஸ்லாமிய சட்டப்படி ஆட்சி செய்ய அல்- ஷபாப் தீவிரவாத அமைப்பு முயற்சி செய்து வருகிறது. அல்-கொய்தா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய இந்த குழுவானது பல வருடங்களாக நாட்டின் பல்வேறு இடங்களில் பெரிய அளவில் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இம்மாதம் முதலாம் திகதி தலைநகர் மக்கா அல் முக்காரமாவீதியில் அல்- ஷபாப்பினால் இதேபோன்றொரு தற்கொலை கார் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 18 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.






