ஜம்மு – காஷ்மீரின் சூரின்சார் பகுதியில் இருந்து ஸ்ரீநகர் நோக்கிப் பயணித்த பேருந்தே நேற்றிரவு (வெள்ளிக்கிழமை) – காஷ்மீர் பள்ளத்தாக்கின் உத்தம்பூரின் மஜல்டா பகுதியில் விபத்திற்குள்ளானது.
குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் ஜம்முவில் அரச மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பனிப்பொழிவு காரணமாக நிலச்சரிவு காரணமாக ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனச் சாரதிகளுக்கு பொலிஸார் சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர்.
இந்நிலையில், ஐந்து நாட்களுக்கு பின்னர் ஸ்ரீநகரில் இருந்து ஜம்மு வரை குறித்த நெடுஞ்சாலை போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
