குறித்த பிரதேசத்துக்கு இன்று (17) விஜயம் செய்த பிரதியமைச்சர் அங்கு நிலவும் குறைபாடுகள் தொடர்பில் மக்களிடம் கேட்டறிந்து கொண்டார்.
கடந்த 30 வருட காலமாக ஏற்பட்ட யுத்த சூழ் நிலையின் போது பொது மக்களின் காணிகள் யுத்தத்திற்கு பின்னர் படையினர் வசமானது இதனை கடந்த இரு மாதத்துக்கு முன்பு முன்னால் கிழக்கு ஆளுனர் ரோஹிதவினால் மக்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
குறித்த காணிகள் மக்களிடம் கையளிக்கப்பட்டும் எவ்வித அடிப்படை வசதிகளற்றும் பல கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருவதாக மக்கள் பிரதியமைச்சரிடம் முறையிட்டார்கள்.
உடனடியாக அடிப்படை வசதிக்கான விடயங்களை செய்து தருவதாகவும் மின்சாரம் குடிநீர் மலசலகூட வசதிகளை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் பிரதியமைச்சர் மக்களிடம் தெரிவித்தார்.
அ . அச்சுதன்





