சட்டவிரோதமாக ஜோர்தானில் தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கே அந்நாட்டு அரசாங்கத்தால் பொதுமன்னிப்புக் காலம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இந்த மாதம் 5 ஆம் திகதியிலிருந்து ஓகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி வரை இந்த பொதுமன்னிப்புக் காலம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை ஜோர்தானில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கைப் பணியாளர்கள் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக அந்நாட்டில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.