பிரிட்டிஷ் கொலம்பியாவில் இடம்பெற்ற மத்திய இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற புதிய தலைவர் ஜக்மீட் சிங், வீடுகளை வாங்குதில் உள்ள பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்போவதாக கூறியுள்ளார்.அதன்படி தனது இந்த புதிய பதவியைப் பயன்படுத்தி, அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு, ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமாக லிபரல் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தனது வெற்றியை அடுத்து ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய போதே ஜக்மீட் சிங் இவ்வாறு கூறினார்.
மேலும் தான் சிறுவனாக இருந்த காலத்தில் தன்னால் இந்நிலையை நினைத்துக்கூடப் பார்க்க முடியாதிருந்ததாகவும், ஆனாலும் தற்போது அது சாத்தியமாகியுள்ளதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது,





