LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, February 4, 2019

தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக உரிமை கோரும் ஊழலுக்கு எதிரான வேட்பாளர்!

எல் சல்வடோரில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக, ஊழலுக்கு எதிரான வேட்பாளர் நயீப் புகெலே (Nayib Bukele) உரிமை கோரியுள்ளார்.

எல் சல்வடோரில் புதிய ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆகியோரைத் தெரிவு செய்வதற்கான ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் 4 வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர். இந்தநிலையில் பெரும்பாண்மை வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், முன்னாள் எல் சல்வடோர் மேயரான நயீப் புகெலே 53 வீதமான வாக்குகளைப் பெற்றுள்ளார்.

அவருக்கு மிகவும் போட்டியாக விளங்கிய கன்சர்வேட்டிவ் வேட்பாளரான கார்லொஸ் கொலேஜா (Carlos Calleja) 32 வீதமான வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இந்தநிலையிலேயே, முதலாவது சுற்றில் தாம் வெற்றிபெற்று, வரலாறு படைத்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

37 வயதான புகெலே (Bukele) நாட்டில் இடம்பெற்று வரும் ஊழலைக் கட்டுப்படுத்துவதாகவும் குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களுக்கு எதிராகப் போராடுவதாகவும் முன்னர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7