ஐரோப்பிய ஒன்றிய மற்றும் அரபு நாடுகளின் தலைவர்கள் ஒன்று கூடும் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்து பிரதமர் தெரேசா மே , சார்ம் எல் ஷெய்க் நகரை சென்றடைந்துள்ளார்.ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் அரபு நாடுகள் எகிப்தில் ஒன்று கூடும் முதல் உச்சிமாநாடு இதுவாகும்.
இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்ட் ரஸ்க் மற்றும் தெரேசா மே ஆகியோருக்கிடையில் பிரெக்ஸிற் பற்றிய விவாதம் நடத்தப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
மார்ச் 12 ஆம் திகதி மீண்டும் பிரெக்ஸிற் உடன்படிக்கை குறித்த வாக்கெடுப்பு பாராளுமன்றில் இடம்பெறும் என்று பிரதமர் தெரசா மே தெரிவித்துள்ளார்.





