கொழும்பு, வாழைத்தோட்டம் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 28 வயதான இளைஞர் படுகாயமடைந்துள்ள நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைத்தோட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைத்தோட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





