LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, February 28, 2019

மாற்றுத் திறனாளி பிள்ளைகளை கல்விச் செயற்பாட்டில் உள்வாங்கல் செயற்திட்டம் தொடர்பான பயிற்சிப் பட்டறை இடம் பெற்றது.

மாற்றுத் திறனாளி பிள்ளைகளை கல்விச் செயற்பாட்டில் உள்வாங்கல் செயற்திட்டம் தொடர்பான பயிற்சிப் பட்டறை ஒன்று இன்று 28ம் திகதி திருகோணமலை சர்வேதயம் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

நவஜீவன புனர்வாழ்வு நிறுவனத்தினால 28, 29 ஆகிய இரணடு தினங்கள் ஏற்பாடு செய்யப்பட்ட  இந் நிகழ்வில் பிரதேச செயலக மட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் சார்பாக பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

தம்பலகாமம், கந்தளாய், குச்சவெளி, திருகோணமலை பட்ணமும் சூழலும் பிரதேச செயலக பிரிவு போன்ற இடங்களில் இருந்து இந்நிகழ்வுக்கு பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

பாடசாலைக்கு செல்லாமல் உள்ள மாற்றுத் திறனாளி பிள்ளைகளை மீள பாடசாலைக்கு இணைக்கும் இச் செயற்திட்டத்தில் அனைவரும் கலந்து ஒத்துழைக்க வேண்டும்  என நவஜீவன நிறுவனத்தின் சார்பாக கேட்டுக் கொண்டனர்.

மேலும் மாகாண கல்வி அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் சமூக சேவை திணைக்கள அலுவலகர்கள் என இந்நிகழ்வில் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

அ . அச்சுதன்



 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7