LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, February 4, 2019

கனேடியப் பேராசிரியர் உயிரிழப்பு : கொலம்பியாவில் ஒருவர் அதிரடியாக கைது!

கொலம்பியாவில் கனேடியப் பேராசிரியர் ஒருவர் உயிரிழந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கொலம்பிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் சைமன் பிரேசர் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராக 57 வயதான றமாஸான் ஜென்சே என்பவர் பணியாற்றி வந்தார்.

இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொலம்பியாவில் மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காகச் சென்றிருந்த சமயம், மெடிலின் நகரில் கடந்த டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி இரவு, தனது தங்குவிடுதிக்கு திரும்பாத நிலையில் காணமல் போயிருந்தார்.

பின்னர்டிசம்பர் 24 ஆம் திகதி அவர் உயிரிழந்தநிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது மரணத்துக்கு காரணம் குடிபானத்தில் நஞ்சு கலக்கப்பட்டிருந்தமையே என வன்கூவரில் உள்ள அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று (திங்கட்கிழமை) குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டியில் ஒருவரைக் கைதுசெய்துள்ளதாக, கனடாவின் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஸ்டெஃபனோ மரோன் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் கைது செய்யப்பட்டவர் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7