கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் கீழ் இயங்கும் பேத்தாழை பாரதியார் பாலர் பாடசாலையின் 2019ஆம் ஆண்டுக்கான பொங்கல் விழாவும்இ புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் இன்றைய தினம் (01.02.2019) அப்பாடசாலையின் தலைமை ஆசிரியை திருமதி.சிவசோதி மோகனதாஸ் அவர்கள் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது கோறளைப்பற்று பிரதேச சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.கணேசன் ரமேஸ் மற்றும்இ பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலய ஆசிரியை திருமதி.ஜெமிணேஸ்வரி அருளப்பு ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டதுடன், இப்பாடசாலை மாணவர்களது பெர்றோரும்இ நலன்விரும்பிகளும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
மேலும் பழைய மாணவர்களால் புதிதாக இணைந்து கொண்ட மாணவர்களை மாலை அணிவித்துஇ வாழ்த்துபாபாக்கள் பாடி வரவேற்கப்பட்டதுன்இ இப்பாடசாலையின் பயிற்சி ஆசிரியர்களது பயிற்சிவிப்பிலான மாணவர்களின் கலைநிகழ்வுகளும் இன்றைய இந்நிகழ்வுகளை அலங்கரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.









