
கிழக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகமும் , திருகோணமலை மாவட்டச் செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த 71 ஆவது தேசிய தினம் திருகோணமலை பிரெட்றிக் கோட்டைக்கு முன்பாக உள்ள கடற்கரையில் இன்று திங்கட்கிழமை (04) காலை 8 .00 மணிக்கு இடம்பெற்றது.
இந் நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல். ஏ.எம். ஹிஸ்புல்லா, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் முப்படையினரது அணிவகுப்புகள் இடம் பெற்றன.
(அ . அச்சுதன் )