ஸ்கொட்லாந்தில் 1,400 க்கும் அதிகமான கைதிகள், மற்றொரு கைதிகளுடன் ஒரே சிறையினை பகிர்ந்து கொள்ள வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து தொழிற்கட்சி, நீதித்துறை செய்தித் தொடர்பாளர் டேனியல் ஜான்ஸனுக்கு ஒரு கடிதத்தின் மூலம் ஹம்ஸா யூசஃப் வெளிப்படுத்தினார்.
ஸ்கொட்லாந்தின் ஒற்றை சிறைகளில் 12% க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு மேல் வைத்திருந்தனர் என இக்கடிதத்தின் ஊடக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கைதிகள் இரு மடங்காக உள்ளனர் என்றும் குறிப்பாக கிளாஸ்கோவில் உள்ள HMP பார்லினி சிறையில் பல தசாப்தங்களாக கைதிகள் இருக்கின்றமை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஸ்கொட்லாந்து சிறைச்சாலை சேவை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஜனவரி 21 திங்கட்கிழமை வரை, சிறைச்சாலையில் 5,877 ஒற்றை சிறை இருந்தது என்றும் இவற்றில் 710 சிறையில் இருவர் இருந்தனர் என்றும் யூசஃப் உறுதிப்படுத்தியுள்ளார்.





