கனடாவில் 5G வலையமைப்புகள் மற்றும் ஹூவாவி நிறுவனத்தினால் விநியோகிக்கப்படும் தொழிநுட்பங்களை தடைசெய்தால் அந்த நாடு பெரும் விளைவுகளைச் சந்திக்கும் என்று கனடாவிற்கான சீன தூதுவர், ஒட்டாவா நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.இரு தரப்புக்கும் இடையில் அண்மையில் ஏற்பட்டுள்ள பா
ரிய வர்த்தக நெருக்கடிகளை அடுத்து அவர் நேற்று (வியாழக்கிழமை) இதனைத் தெரிவித்தார்.
சீன தூதுவர் லூ ஷாயி ஒரு செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில், கனடா எதிர்நோக்கப்போகும் விளைவுகள் தொடர்பாக மேலதிக விபரங்களை வௌியிடவில்லை.
இந்தநிலையில் கனடா 5G தொலைத் தொடர்பில் உள்ள பாதுகாப்பு விடயங்கள் பற்றி கற்று வருகின்றது. எனினும், சில கூட்டணி நிறுவனங்கள் ஹுவாவி உபகரணங்களை விலக்குவது தொடர்பாக அறிவிக்கவில்லை.





