
திருகோணமலை என்று சொல்லும்போது அங்கிருக்கும் மான்கள்தான் ஞாபகத்திற்கு வரும் . இவை அன்றாடம் உணவுக்காக அலைந்து திரிந்து பொழித்தின்(Polythin) களை உண்டு இறந்து போகும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்றதால் திருகோணமலை ரோட்டரி கழகம் அவற்றுக்குரிய உணவகம் / உறைவிடம் ஒன்றை அமைப்பதட்கு கடந்த சில வருடங்களாக முயன்று வந்தது .
ஆவுஸ்திரேலியாவை சேர்ந்த திரு. விக்கி மற்றும் அவரின் மனைவி கரேன் அவர்களும் உதவுதட்கு முன் வந்தார்கள் . திருகோணமலை நகர சபையின் உதவியுடன் , முக்கியமாக நகர சபை தலைவர் நா .இராசநாயகம் அவர்களின் பங்களிப்புடன் உணவகம்/ உறைவிடம் அமைக்கப் பட்டுள்ளது
இவ் அழகிய மான்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் வசதிகளுடன் கூடிய கொட்டில் ஓன்று அமைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து நீர் கிடைக்கக்கூடிய வகையில் நீர் தாங்கி அமைக்கப்பட்டுள்ளது
இவர்களுக்கான உணவு மரக்கறி சந்தையில் இருந்து துப்பரவு செய்யப் பட்டு புதிதாக அமைக்கப் படட சீமெந்து தரையில் இடப்படுகிறது.
(அ . அச்சுதன்)









